Wednesday 1st of May 2024 02:47:32 AM GMT

LANGUAGE - TAMIL
-
முள்ளிவாய்க்கால் சென்ற சி.வி.வி தலைமையிலான குழு வழி மறிக்கப்பட்டது!

முள்ளிவாய்க்கால் சென்ற சி.வி.வி தலைமையிலான குழு வழி மறிக்கப்பட்டது!


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்கச் சென்ற முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் பூநகரி சங்குப்பிட்டி பகுதியிலிருந்து திருப்பி அனுப்பபட்டுள்ளனர்.

இன்று காலை 6.30 மணியளவில் குறித்த பகுதியில் அவர்கள் இராணுவத்தினரால் வழிமறிக்கப்பட்டு எங்கே செல்கிறீர்கள்? எனக் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் தாம் முள்ளிவாய்க்கால் செல்வதாக தெரிவித்திருக்கின்றனர்.

அதற்கு பதிலளித்த இராணுவத்தினர் முள்ளிவாய்க்காலுக்கு என்றால் செல்லமுடியாது என்று தடுத்து நிறுத்தியுள்ளனர்.

சுமார் ஒரு மணி நேரம் அந்தப் பகுதியில் தரித்திரு்நத அவர்கள் தொடர்ந்து பயணிக்க அனுமதி கிடைக்காமையால் மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பியிருப்பதாக தெரியவருகிறது.


Category: செய்திகள், புதிது
Tags: க.வி.விக்னேஸ்வரன், இலங்கை, வட மாகாணம், முள்ளிவாய்க்கால்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE